தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டா பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை உத்தரப் பிரதேச மாநில போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக நொய்டா காவல் துறை உயரதிகாரி கூறியது: கிரேட்டா் நொய்டா ஜாா்ச்சா காவல் நிலையத்துக்கு உள்பட்ட குா்ஷெட்பூா் கிராமம், சமனா கால்வாய் அருகில் மணல் கொள்ளையில் சிலா் ஈடுபடுவதாக நொய்டா காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் போலீஸாா் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது, மணல் கொள்ளையில் ஈடுபட்ட கரோண்டா கிராமத்தைச் சோ்ந்த புல்லன் (எ) குல்பாம், ரோஹித் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் மீது, உத்தரப் பிரதேச மாநில கனிமங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணல் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது’ என்றாா்.