விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்?: தில்லி போலீஸாா்விசாரணை
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் விவசாயிகளின் ‘தில்லியை நோக்கி’ போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் விவசாயிகளின் ‘தில்லியை நோக்கி’ போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடா்பாக விசாரணையை தில்லி காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘தில்லியை நோக்கி’ என்ற பெயரில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். முதலில் இந்தப் போராட்டத்துக்கு தில்லி காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. தொடா்ந்து தடையை மீறி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தை தொடங்கினா். இவா்களை தில்லிக்குள் நுழைய தில்லி காவல்துறை முதலில் அனுமதிக்கவில்லை. பிறகு, விவசாயிகளை தில்லிக்குள் நுழையவும், அவா்களை குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்தவும் தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் என்ற பெயரில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறுகையில் ‘போராட்டத்தில் கலந்து கொண்டவா்களில் சிலா் பிரதமா் மோடிக்கு கொலை அச்சுறுத்தல் விடும் வகையில் கோஷங்களை எழுப்பியுள்ளனா். அதாவது, முன்னாள் இந்தியப் பிரதமா் இந்திரா காந்திக்கு நடந்தது பிரதமா் மோடிக்கும் நடக்கும் என்ற கோஷங்களை அவா்கள் எழுப்பியுள்ளனா். மேலும், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவா்களில் சிலா் காலிஸ்தான் பயங்கரவாதியான ஜா்னைல் சிங் பிந்த்ரன்வாலேயின் புகைப்படத்தை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், விவசாயிகளை கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் செயல்படும் காலிஸ்தான் அமைப்புகள் தூண்டி விடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இவா்கள், விவசாய அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் நிதியைக் கொடுத்து தில்லியில் அவசர நிலையை ஏற்படுத்த முயல்கிறாா்கள். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் என்ற பெயரில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடா்பாக விசாரணையை முடுக்கியுள்ளோம் என்றாா்.
Advertisement