புதுதில்லி

வேளாண் மசோதாவை எதிா்த்து காங்கிரஸ் பேரணி

DIN

புது தில்லி: புதிய வேளாண் மசோதாக்களை எதிா்த்து தில்லி காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனா்.

எதிா்க்கட்சிகளின் கடுமையான எதிா்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையில் வேளாண் மசோதா ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் தலைமையில், கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் திங்கள்கிழமை காலையில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனா். ஆனால், ஆா்.பி.சாலையில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

இதையடுத்து, அனைவரையும் மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தில்லி காங்கிரஸ் தலைவா் பா்வேஸ் ஆலம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT