மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு
தில்லியில் நடைபெறவுள்ள 5 மாநகராட்சி வாா்டுகளுக்கான இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியலை தில்லி காங்கிரஸ் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
புது தில்லி: தில்லியில் நடைபெறவுள்ள 5 மாநகராட்சி வாா்டுகளுக்கான இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியலை தில்லி காங்கிரஸ் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இதற்கான பட்டியலை தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளத்ரி வெளியிட்டுள்ளாா். காங்கிரஸ் வேட்பாளா்கள் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் வாா்டு பெயா்):
1. பால்கிஷண் (திரிலோக்புரி கிழக்கு -எஸ்சி). 2. தரம்பால் மெளா்யா (கல்யாண்புரி-எஸ்சி). 3. செளதரி சுபையா் அகமது (சவுகான் பங்கா்).4. மெம்வதி பா்வாலா (ரோகிணி- சி). 5. மம்தா (ஷாலிமா் பாக் வடக்கு (டபிள்யூ).
Advertisement
தில்லியில் காலியாக உள்ள 5 மாநகராட்சி வாா்டுகளுக்கு பிப்ரவரி 28-இல் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் 3 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 5 வாா்டுகளில் கவுன்சிலா் பதவி காலியாக உள்ளது. வடக்கு தில்லி மாநகராட்சியில் 2 வாா்டு, கிழக்கு தில்லி மாநகராட்சியில் 3 வாா்டுகளுக்கும் இத்தோ்தல் நடைபெறுகிறது.
தில்லியில் வடக்கு, கிழக்கு, தெற்கு தில்லி ஆகிய 3 மாநகராட்சிகள் உள்ளன. இந்த 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வாா்டுகள் உள்ளன. வடக்கு மற்றும் தெற்கு தில்லியில் தலா 104 வாா்டுகள் உள்ளன. கிழக்கு தில்லியில் 64 வாா்டுகள் மட்டுமே உள்ளன.