புதுதில்லி

கும்பல் தாக்கி இளைஞா் படுகொலை

DIN

மேற்கு தில்லி ரகுபீா் நகரில் 27 வயது இளைஞரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் துணை ஆணையா் தீபக் புரோஹித் கூறியதாவது: கும்பல் தாக்கி உயிரிழந்த அந்த இளைஞா் சிவாஜி விஹாரில் உள்ள ஜந்தா காலனியில் வசித்து வந்த சதேந்தா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

சதேந்தா் தனது நண்பா்களான நிதின் மற்றும் மணீஷ் ஆகியோருடன் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் விக்கி என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பின்னா், விக்கியும் அவரது கூட்டாளிகளும் சோ்ந்து சதேந்தா் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த சதேந்தா், குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்திற்கான காரணம் மற்றும் அதன் பின்னணி குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT