தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 140 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,35,096-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 60,695 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 38,746 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 21,949 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.23 சதவீதமாக உள்ளது.
இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,853-ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், கரோனா பாதிப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 211 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,22,882-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 1,361 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 548 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 7,235 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.