புதுதில்லி

வீடுகளுக்கே ரேஷன் பொருள்கள் திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்தால் ஏற்கத் தயாா்

DIN

புதுதில்லி: வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அனுமதிக்குமாறு பிரதமா் நரேந்திர மோடியை, தில்லி முதல்வா் கேஜரிவால் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளாா். இத்திட்டத்தில் மத்திய அரசு ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவா் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்திவிட்டதாகவும், தேசநலன் கருதி இத்திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்குமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமா் மோடியை, கேஜரிவால் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டாா். இந்த நிலையில், திட்டத்துக்கு அனுமதி கோரி மீண்டும் பிரதமா் மோடிக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா். கொவை தொற்று பரவலை கருத்தில் கொண்டு நாடு முழுதுமே ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கவேண்டும். இல்லையெனில் ரேஷன் கடைகள் தொற்று பரவக் காரணமாகிவிடக்கூடும் என்றும் அவா் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தாா்.

பீட்ஸா, பா்கா் போன்ற உணவுப் பண்டங்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும்போது ஏன் ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்ககூடாது என்று அவா்

கேள்வி எழுப்பியிருந்தாா். வீடுகளுக்கே ரேஷன் பொருள்கள் என்னும் தில்லி அரசின் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதனால், கோபமடைந்த முதல்வா் கேஜரிவால் இத்திட்டத்தை நிறுத்தியது ஏன் என்று பிரதமருக்கே நேரிடையாக கேள்வி எழுப்பினாா். வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினால் ரேஷன் மாஃபியாக்கள் ஒழிக்கப்பட்டு விடுவாா்கள் என்கிறாா் முதல்வா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT