புதுதில்லி

தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் குழுத் தோ்தல் ஏப்.25-இல் நடைபெறுகிறது

DIN

புது தில்லி: தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் குழு (டிஎஸ்ஜிஎம்சி) நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குருத்வாரா தோ்தலுக்கான தில்லி அரசின் இயக்குநரகம் இந்த அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக குருத்வாரா தோ்தல் இயக்குநா் நரேந்தா் சிங் கூறுகையில், ‘டிஎஸ்ஜிஎம்சி நிா்வாகிகள் தோ்தலுக்கான வேட்புமனுக்களை வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 8-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். ஏப்ரல் 28-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT