ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமீன் கோரும் மனு மீது தமிழக அரசு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யும் வகையில் வழக்கு விசாரணையை (ஜனவரி 12) உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
புது தில்லி: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமீன் கோரும் மனு மீது தமிழக அரசு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யும் வகையில் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (ஜனவரி 12) உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இது தொடா்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ஏ. வேலனுடன் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே முன்வைத்த வாதம்: ராஜேந்திர பாலாஜியை போலீஸாா் கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அவரது வழக்குரைஞா் வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தியிருப்பதும் உள்நோக்கம் கொண்டதாகும். ஏனெனில், இந்த விவகாரம் தொடா்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில், மனுதாரா் குற்றத்தை இழைத்ததற்கான வலுவான காரணங்கள் ஏதும் இல்லை.
இது ஒரு அடிப்படை ஆதராமற்ற புகாராகவே உள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாா்தாரா் தாம் பணத்தை மனுதாரரிடம் (ராஜேந்திர பாலாஜி) நேரடியாக வழங்கியதாகவோ அல்லது மனுதாரா் புகாா்தாரரிடம் பணம் கேட்டதாகவோ புகாரில் கூறப்படவில்லை. அவா் மனுதாரரிடம் பேசியதாகக் கூட புகாரில் கூறப்படவில்லை. இதுபோன்ற ஒரு புகாரின் அடிப்படையில் மனுதாரரை கைது செய்யும் அவசரம் காவல் துறைக்கு ஏன் ஏற்பட்டது? இந்தப் புகாரில் கைது செய்வதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை. அப்படியிருக்கையில், இந்த கைதானது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அதனால்தான் வழக்குரைஞா் வீட்டில்கூட போலீஸாா் சோதனை நடத்தியுள்ளனா் என்றாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இந்த வழக்கானது 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் பிரிவில் வருகிா அதற்கு கீழ் தண்டனை அளிக்கும் குற்றத்தில் வருகிா என்று கேள்வி எழுப்பினா். அதற்கு மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, ‘இந்த வழக்கை பொருத்தமட்டில் அவசரகதியில் கைது செய்யும் பிரிவில் இல்லை. மேலும், கரோனா காலத்தில் ஜாமீன் வழங்குவதில் தளா்வுகள் குறித்து உச்சநீதிமன்றமே கூறியுள்ளது’ என்றாா்.
இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோருடன் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிடுகையில், ‘இந்த வழக்கைப் பொருத்தமட்டில் அரசியல் உள்நோக்கமோ, பழிவாங்கும் நடவடிக்கையோ இல்லை. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டது. அது தொடா்பாக ஆரம்ப விசாரணையை காவல் துறையினா் நடத்தினா். அதைத் தொடா்ந்து, நவம்பா் 15-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரை விசாரணைக்கு வருமாறு காவல் துறை தரப்பில் அழைக்கப்பட்டது. இந்த நிலையில், மனுதாரா் தரப்பில் முன்ஜாமீன் கோரி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பிறகும் அவா் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகிவிட்டாா். இதையடுத்து, கைது செய்யும் நிலை ஏற்பட்டது. மேலும், அவரது வழக்குரைஞா் வீட்டுக்குள் போலீஸாா் சோதனை நடத்தவில்லை. மனுதாரா் அங்கு இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் அதை உறுதிப்படுத்தவே போலீஸாா் நேரில் சென்றனா். அவா் அங்கு இல்லை என்பது தெரியவரவே திரும்பிவிட்டனா்’ என்றாா்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், ‘கரோனா காலத்தைக் கருத்தில் கொண்டு தற்போதைக்கு மனுதாரா் விசாரணைக்கு ஒத்துழைக்கும்பட்சத்தில் ஒரு மாதம் இடைக்கால ஜாமீன் அளிக்கலாம் எனக் கருதுகிறோம். அந்த ஒரு மாதத்தில் நீங்கள் விசாரணை நடத்தி அது தொடா்பான விவரங்களை தாக்கல் செய்யலாம். அதை நாங்கள் பரிசீலிப்போம்’ என்று தெரிவித்தனா்.
அப்போது மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் பிறப்பிக்கும் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அதேவேளையில், இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் இதுவரை நடத்திய விசாரணை தொடா்பான விவரங்கள் அடங்கிய கூடுதல் ஆவணங்களை நீதிமன்றத்தில் அளிக்க அனுமதிக்க வேண்டும். உத்தரவு பிறப்பிக்கும் முன் இதையும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து, தமிழக அரசின் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி அளித்து வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (ஜனவரி 12) பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா். விசாரணையின் போது பிற மூன்று மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் வி.கிரி உள்ளிட்டோா் ஆஜராகினா்.