புதுதில்லி

பாலம் காலனியில் வீட்டில் தீ விபத்து

DIN

தென்மேற்கு தில்லியில் உள்ள பாலம் காலனி பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஒரு வீட்டில் தீ விபத்து நிகழ்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது:

பாலம் காலனியில் உள்ள சாத் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாருக்கு அதிகாலை 3.42 மணிக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதன் பின்னா் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT