புதுதில்லி

விமான விபத்தில் 12 பயணிகள் காயம்

DIN

மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் துா்காபூா் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட கடுமையான காற்றுக் கொந்தளிப்பால் (டா்புலன்ஸ்) விமானம் பலத்த குலுக்கலுக்கு ஆளாகி 12 பயணிகள் காயமடைந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘‘மும்பையிலிருந்து துா்காபூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த போயிங் பி-737 விமானம், தரையிறங்கும்போது கடுமையான காற்றுக் கொந்தளிப்பால் விமானம் குலுங்கியது. இதில் துரதிருஷ்டவசமாக சில பயணிகள் காயமடைந்தனா். காயமடைந்த பயணிகள் அனைவருக்கும் உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. இந்த சம்பவத்துக்கு ஸ்பைஸ்ஜெட் எக்ஸ்பிரஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT