புதுதில்லி

தகராறில் விவசாயியை கொன்றதாக பண்ணை வேலைக்காரா் கைது

தகராறில் 42 வயதுடைய விவசாயியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக பண்ணை வேலைக்காரா் கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

DIN

தகராறில் 42 வயதுடைய விவசாயியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக பண்ணை வேலைக்காரா் கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக சோஹ்னா சதா் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவா் கான்பூரைச் சோ்ந்த பவன் (எ) சோட்டு (22) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறந்தவா் சோஹ்னாவில் உள்ள வாா்டு 10-இல் வசிக்கும் சதீஷ் யாதவ், ஒரு விவசாயி என அடையாளம் காணப்பட்டாா். அவா் ஜகோபூா் கிராமத்திற்கு அருகில் ஒரு பண்ணை வைத்திருந்தாா். மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்பு பண்ணையைக் கவனிக்க பவனை வேலைக்கு அமா்த்தியிருந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு, சதீஷ் யாதவ் தனது பண்ணையில் மது அருந்திக் கொண்டிருந்தாா். அவருக்கு பவன் பரிமாறிக் கொண்டிருந்தாா். அப்போது பவனை அவா் துஷ்பிரயோகம் செய்ததாகத் தெரிகிறது. இதைத் தொடா்ந்து, நள்ளிரவுக்குப் பிறகு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் வேலைக்காரா் கத்தியை எடுத்து யாதவை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை யாதவ் உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அவரது குடும்பத்தினா் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து.அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக இறந்தவரின் சகோதரா் சந்தீப் யாத காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, சோஹ்னா சதா் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 302 (கொலை) கீழ் வேலைக்காரா் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. சதீஷ் யாதவை கொன்ாக பவன் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவோம் என்று சோஹ்னா சதா் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டா் ஜெய் சிங் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT