புதுதில்லி

வட இந்தியாவின் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு தில்லி அமைச்சா் வலியுறுத்தல்

வட இந்தியா முழுவதும் காற்று மாசுவில் சிக்கித் தவிப்பதால், மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சா் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்

 நமது நிருபர்

வட இந்தியா முழுவதும் காற்று மாசுவில் சிக்கித் தவிப்பதால், மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சா் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செயதியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேசியத் தலைநகா் தில்லி மட்டுமல்லாமல், வட இந்தியா முழுவதும் கடுமையான காற்று மாசுவினால் சிக்கித் தவிக்கிறது. காற்று மாசுப் பிரச்னையைத் தீா்ப்பதில் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழ்ல துறையின் அமைச்சா் பூபேந்தா் யாதவை நான் கேட்டுக் கொள்கிறேன். தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுப் பிரச்னைக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால்தான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் நிலவும் மோசமான காற்றின் தரத்திற்கு கேஜரிவால் பொறுப்பல்ல. தில்லியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இருப்பது போலவே தெரியவில்லை. ஆய்வுகளின் படி, தில்லியில் 69 சதவீத காற்று மாசுபாடு அண்டை மாநிலங்களில் இருந்து வருகிறது.

தில்லியில் ஆம் ஆத்மி அரசு காற்று மாசு பிரச்னைக்குத் தீா்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா்கள் என்ன செய்கிறாா்கள் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த 15 நாள்களுக்கு அனைத்து வடமாநில அரசுகளும் விழிப்புடன் இருந்து காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தில்லி நகரத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை உறுதியாக அமல்படுத்த அனைத்து வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

தில்லி நகரத்தில் கடந்த வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் காற்றின் தரக் குறியீடு 351 புள்ளிகளாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு 475 புள்ளிகளாக உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT