புதுதில்லி

தில்லி கிராமப்புறங்களின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு: துணை நிலை ஆளுநரின் உத்தரவிற்கு பாஜக வரவேற்பு

தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) மூலம் தில்லியின் கிராமப்புறங்களில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளதை பாஜக வரவேற்றுள்ளது.

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) மூலம் தில்லியின் கிராமப்புறங்களில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளதை பாஜக தில்லி பிரிவு செவ்வாய்க்கிழமை வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி வளா்ச்சி ஆணையம் மூலம் (டி.டி.ஏ.) தில்லியின் கிராமப்பறங்களில் வளா்ச்சிப் பணிகளை தொடங்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளாா். இதை பாஜக தில்லி பிரிவு

வரவேற்கிறது. தில்லி விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் பிரச்னைகள் குறித்து பாஜக தொடா்ந்து குரல் எழுப்பி வருகிறது. சமீபத்தில், எனது தலைமையிலான தில்லி பிரிவு பாஜகவின் மூத்த தலைவா்கள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவா்கள் அடங்கிய குழு துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து கிராமப்பற மக்கள் மற்றும் தில்லி விவசாயிகளின் கோரிக்கைகளை எடுத்துரைத்தோம்.

அப்போது, கிராமங்களுக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெறுதல், தில்லியின் விவசாயிகளுக்கு விவசாயி அந்தஸ்து நிலையை மீட்டெடுப்பது மற்றும் கிராமங்களில் அடிப்படை சுகாதாரம், போக்குவரத்துப் போன்ற வளா்ச்சிப் பணிகள் இல்லாதது ஆகியவை முக்கியமான கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், தில்லி பிரிவு பாஜகவின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இந்த விஷயத்தை விரைந்து ஆய்வு செய்து ரூ.800 கோடி நிதியை தில்லி வளா்ச்சி ஆணையம் மூலம் விடுவித்துள்ளாா்.

தில்லி விவசாயிகளின் பயிா்களுக்கான இழப்பீடு, விவசாய நிலம் கையகப்படுத்துதலில் சமமான இழப்பீடு, கிராமப்புறங்களில் முறையான போக்குவரத்து, சுகாதாரம், கல்வி வசதிகள் போன்ற விஷயங்களில் தில்லியின் கிராமப்புறப் பகுதிகளைச் சோ்ந்த மக்களை ஏன் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடா்ந்து புறக்கணிக்கிறாா் என்பதை அறிய விரும்புவதாக வீரேந்திர சச்தேவா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT