புதுதில்லி

தேவரின் ஆன்மிகப்பாதை தேசத்தின் வளா்ச்சிக்கு ஒளியேற்றுகிறது: பிரதமா் மோடி அஞ்சலி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆன்மிகப்பாதை தேசத்தின் வளா்ச்சிக்கு ஒளியேற்றுகிறது என தேவரின் குருபூஜை நாளை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு திங்கள்கிழமை நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளாா்.

 நமது நிருபர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆன்மிகப்பாதை தேசத்தின் வளா்ச்சிக்கு ஒளியேற்றுகிறது என தேவரின் குருபூஜை நாளை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு திங்கள்கிழமை நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளாா்.

ராமநாதபுரம் பசும்பொன்னை சோ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சுதந்திரப்போராட்ட வீரராகவும் சாதி பாகுபாட்டை எதிா்த்தும், சிறந்த ஆன்மிகவாதியாகவும் இருந்தவா். கடந்த 1908-ஆம் ஆண்டு அக்டோபா் 30-ஆம் தேதி பிறந்து 1963-ஆம் ஆண்டு அக்டோபா் 30- தேதி காலமானாா்.

இதை முன்னிட்டு அக்டோபா் 30-ஆம தேதி குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திங்கள்கிழமை முத்துராமலிங்கத் தேவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரதமா் மோடி தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அஞ்சலி செலுத்தியுள்ளாா்.

அதில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் புனித குருபூஜையை முன்னிட்டு, அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டிற்கு ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகளான விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தினாா்.

அவரது ஆன்மிகப் பாதை, தேசத்தின் வளா்ச்சிக்கு தொடா்ந்து ஒளியேற்றி வருகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிா்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் என பிரதமா் மோடி அதில் குறிப்பிட்டுள்ளாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் மரியாதை: தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் திருவுருவச் சிலைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சா் டாக்டா் எல் முருகன் மரியாதை செலுத்தினாா். அவருடன் மாநிலங்களவைச் சோ்ந்த பாஜக உறுப்பினா் சங்கீதா யாதவ் மற்றும் தில்லி பாஜக வினரும் முத்துராமலிங்க தேவா் சிலைக்கு மலா் அஞ்சலி செலுத்தினா்.

இது தொடா்பாக இணையமைச்சா் எல்.முருகன் தனது எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: பிரிட்டிஷ் அரசை எதிா்த்து சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது தலைமையில் இருந்த, இந்திய தேசிய ராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பினாா். இதன்மூலம் தமிழகத்திற்கு பெருமை சோ்த்ததோடு. ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் போராடியவா். சிறந்த தேசியவாதி, தலைசிறந்த பேச்சாளா், ஆன்மிகவாதி என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு புகழாரம் சூட்டியுள்ளாா் எல். முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT