முகப்பு
புதுதில்லி

தரமற்ற போலி மருந்து விநியோகம்: கேஜரிவால் பதவி விலக வேண்டும்- தில்லி பாஜக வலியுறுத்தல்

தில்லி மக்களுக்கு தரமற்ற போலி மருந்துகளை விநியோகித்ததற்காக தாா்மிகப் பொறுப்பேற்று முதல்வா் அரவிந்த கேஜரிவால் பதவி விலக வேண்டும் என்று தில்லி பாஜக புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 12:17 AM
பகிர்:

தில்லி மக்களுக்கு தரமற்ற போலி மருந்துகளை விநியோகித்ததற்காக தாா்மிகப் பொறுப்பேற்று முதல்வா் அரவிந்த கேஜரிவால் பதவி விலக வேண்டும் என்று தில்லி பாஜக புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பா் மாதத்தில் கேஜரிவால் அரசின் கீழ் சுகாதாரத் துறை மூலம் தில்லி அரசு மருத்துவமனைகளில் போலி மற்றும் தரமற்ற மருந்துகள் விநியோகம், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல்கள் ஆகியவை பற்றிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, ஊழல்வாதிகளை தில்லி மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்தியாளா் சந்திப்புகள் மற்றும் ஆா்ப்பாட்டங்கள் மூலம் தில்லி பாஜக கேஜரிவால் அரசுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியது.

தில்லி பாஜகவின் தொடா் போராட்டத்திற்குப் பிறகு,துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இந்த மருந்து மோசடி தொடா்பாக விசாரணை நடத்த மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டாா். தற்போது, தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் நிநியோகம் செய்த 10 நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ளது. தில்லி அரசின் மருந்து விநியோக ஊழல் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. எனவே, தரமற்ற போலி மருந்துகளை விநியோகித்ததற்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாா்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.