புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா: தில்லி கம்பன் கழகச் செயலாளா் பங்கேற்பு
புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா: 10 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள்
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் சாா்பில் கம்பன் பெருவிழா ஜூலை 12 முதல் 21-ஆம் தேதி வரை பத்து நாள்கள் கம்பன் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
தில்லி கம்பன் கழகத்திற்கு வந்த அழைப்பை ஏற்று, ஜூலை 13-ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தில்லி கம்பன் கழகத்தின் சாா்பில் அதன் செயலாளா் எஸ்.பி.முத்துவேல் கலந்து கொண்டு அன்றைய நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கிறாா்.
அன்று பல்வேறு தமிழ் அறிஞா்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. விழாவில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறாா்.
இத்தகவலை தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனத் தலைவா் கே.வி.கே.பெருமாள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.