PTI
புதுதில்லி

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

தில்லியில் காற்று தரக் குறியீடு 291 ஆக பதிவானது...

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: தில்லியில் கடந்த 7 ஆண்டுகளைவிட காற்றின் தரம் மேம்பட்டுள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை(நவ. 4) காற்றின் தரம் சற்று மேம்பட்டு காற்று தரக் குறியீடு 291 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலை, கடந்த ஆண்டுகளில் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், 2024-இல் 381 ஆகவும், 2023-இல் 415 ஆகவும், 2022-இல் 447 ஆகவும், 2021-இல் 382 ஆகவும், 2020-இல் 343 ஆகவும், 2019-இல் 407 ஆகவும் இருந்ததைத் தில்லி அரசின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், பிஎஸ்-3 அல்லது அதற்கும் குறைவான மாசு உமிழ்வு தரநிலைகளுக்கு இணங்கும் வா்த்தக சரக்கு வாகனங்கள் நுழைவதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, பிஎஸ்-4 விதிமுறைகளுக்கு கீழே உள்ள 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தில்லியின் எல்லைகளிலிருந்து திருப்பிஅனுப்பப்பட்டன. தில்லியில் 50,000 முதல் 70,000 வாகனங்கள் பிஎஸ்-4 உமிழ்வு தரநிலைகளுக்குக் கீழே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Delhi's Air Quality Index (AQI) on Tuesday stood at 291, compared to previous years marking an improved AQI for this date in seven years, the Delhi government said in a statement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு நனவானது!

சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

"விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

SCROLL FOR NEXT