தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு
தில்லியில் காற்று தரக் குறியீடு 291 ஆக பதிவானது...
புது தில்லி: தில்லியில் கடந்த 7 ஆண்டுகளைவிட காற்றின் தரம் மேம்பட்டுள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை(நவ. 4) காற்றின் தரம் சற்று மேம்பட்டு காற்று தரக் குறியீடு 291 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலை, கடந்த ஆண்டுகளில் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், 2024-இல் 381 ஆகவும், 2023-இல் 415 ஆகவும், 2022-இல் 447 ஆகவும், 2021-இல் 382 ஆகவும், 2020-இல் 343 ஆகவும், 2019-இல் 407 ஆகவும் இருந்ததைத் தில்லி அரசின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், பிஎஸ்-3 அல்லது அதற்கும் குறைவான மாசு உமிழ்வு தரநிலைகளுக்கு இணங்கும் வா்த்தக சரக்கு வாகனங்கள் நுழைவதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, பிஎஸ்-4 விதிமுறைகளுக்கு கீழே உள்ள 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தில்லியின் எல்லைகளிலிருந்து திருப்பிஅனுப்பப்பட்டன. தில்லியில் 50,000 முதல் 70,000 வாகனங்கள் பிஎஸ்-4 உமிழ்வு தரநிலைகளுக்குக் கீழே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
Delhi's Air Quality Index (AQI) on Tuesday stood at 291, compared to previous years marking an improved AQI for this date in seven years, the Delhi government said in a statement.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.