படம் | ஏஎன்ஐ
புதுதில்லி

தில்லியில் ‘செயற்கை மழை’ சோதனை வெற்றி!

தில்லியில் முதல்முறையாக செயற்கை மழை சோதனை நடத்தப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: தில்லியில் செயற்கை மழை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தில்லியில் 53 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக செயற்கை மழை சோதனை செவ்வாய்க்கிழமை(அக். 28) நடத்தப்பட்டது.

ஐஐடி கான்பூர் இதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்கிறது. விமானத்திலிருந்து வான் வழியாக நிலப்பரப்பை நோக்கி செயற்கை ரசாயனங்கள் தூவி அதன்மூலம் சுமார் 90 நிமிஷங்கள் வரை செயற்கை மழைப்பொழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்காக கான்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட விமானத்திலிருந்து மேக விதைப்பு(க்ளவுட் சீடிங்) முறையில் செயற்கை மழைப் பொழிவு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தில்லியின் புராரி மற்றும் கரோல் பாக் பகுதிகளில் இந்த சோதனை முயற்சி இன்று நடத்தப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவே செயற்கை மழை சோதனை தில்லியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Delhi: Artificialrain trial conducted; officials call it a success

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சபரிமலை சீசன்! சிறப்புப் பேருந்துகளை அறிவித்தது போக்குவரத்துக் கழகம்!!

டீ- ஏஜிங் ஸ்டார்... மலைக்கா அரோரா!

பிகாரில் பஞ்ச பாண்டவர் கூட்டணி: அமித் ஷா

களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது: அமைச்சர் கே.என்.நேரு

இந்தப் புன்னகை என்ன விலை... சந்தீபா தர்!

SCROLL FOR NEXT