முகப்பு
புதுதில்லி

சுபாஷ் பிளேஸ் கொள்ளை சம்பவம்: முக்கிய நபர் கைது

Updated On : 25 செப்டம்பர் 2025, 3:25 am IST
பகிர்:

தில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியில் உள்ள நகைக் கடையில் விற்பனையாளரைக் கத்தியால் குத்தி ரூ.50 லட்சம் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட கியாம் (எ) ஃபாஹிம் (19) மங்கோல்புரியைச் சேர்ந்தவர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: கோஹத் என்கிளேவ் மெட்ரோ நிலையம் அருகே உள்ள நகைக் கடைக்குள் கடந்த ஜூலை 12-ஆம் தேதி ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், விற்பனையாளரைக் கத்தியால் குத்தி கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்து சென்றது.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவம் தொடர்பாக சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய ஜிதேந்தர், விஜய் குமார், விஷால் சைன், சிவம் ஆகியோர் கைதுசெய்யப்பட்ட நிலையில், விற்பனையாளரைக் கத்தியால் குத்திய கியாம் தலைமறைவானார்.

இந்நிலையில், கியாமை குற்றப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர் அந்த அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments