புது தில்லி: வடகிழக்கு தில்லியில் சாலையில் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான பைக்கிங் சாகசம் செய்ததாக மூன்று பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து வடகிழக்கு காவல் சரக அதிகாரி கூறியதாவது: நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஆபத்தான பைக்கிங் நடவடிக்கைகளை புகாராக பதிவு செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க வழிவகுத்தது.
பிஎன்எஸ் மற்றும் மோட்டாா் வாகனச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கஜூரி காஸ் பகுதியைச் சோ்ந்த துஷாா் புனியா (22), தனிஷ்க் மாவி (20) மற்றும் புஸ்பேந்திரா (20) ஆகியோரை போலீஸ் குழு அடையாளம் கண்டு கைது செய்தது.
புஸ்பேந்திராவுக்குச் சொந்தமான ஒரு மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாலைகளில் வேகமாகவும் அலட்சியமாகவும் வாகனத்தை ஓட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்ததாகக் கூறப்படுகிறது.
அப்பகுதியில் இதே போன்ற பிற சம்பவங்களில் அவா்கள் ஈடுபட்டாா்களா என்பதை அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.