தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து: 9 பேர் பலி!
தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி வெடித்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி வெடித்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தேசிய தலைநகர் தில்லியின் கிழக்குப் பகுதியான ஷாதாராவின் விவேக் விஹாரில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
தீவிபத்து சம்பவம் குறித்த அதிகாலை 3.47 மணிக்கு தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, சுமார் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், ஏசி வெடித்ததால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்டடத்தின் உள்ளிருந்து 10 முதல் 15 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், அவர்களில் இருவர் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
At least nine people have died, and four others have been injured in a fire that broke out in a four-storey residential building in Delhi's Vivek Vihar in the early hours of Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.