கைதியிடம் செல்போன் பறிமுதல்
திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதியிடமிருந்து சனிக்கிழமை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறைக் காவலர்கள் சிறை வளாகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப
திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதியிடமிருந்து சனிக்கிழமை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறைக் காவலர்கள் சிறை வளாகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த கைதி சுல்தான்கனி (47)செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை சிறைக் காவலர்கள் பார்த்தனர்.
அவரிடமிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் சிம்கார்டு, பேட்டரி இருந்தது. சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.