முகப்பு
திருநெல்வேலி

பெண் போலீஸ் தீக்குளிப்பு: கணவர் விஷம் குடித்து தற்கொலை

கோவில்பட்டி, ஜன. 8:     ராஜபாளையம் அருகே மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கணவர் சனிக்கிழமை கோவில்பட்டியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  கோவில்பட்டி தாமஸ் நகரைச் சேர்ந்த ஆர

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

கோவில்பட்டி, ஜன. 8:     ராஜபாளையம் அருகே மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கணவர் சனிக்கிழமை கோவில்பட்டியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

 கோவில்பட்டி தாமஸ் நகரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஆரோக்கியராஜ் (30).

இவருக்கும், காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிச்சை மகள் ஜான்சிக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம்.

 ஜான்சி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படைப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.

ஆசிரியர் பயிற்சி படித்து முடித்த ஆரோக்கியராஜ், தாற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

 ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி காவல் குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியிடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஜான்சி, வீட்டில் வைத்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.

பலத்த காயமடைந்த அவர், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  இந்நிலையில், கோவில்பட்டியிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்த அவரது கணவர் ஆரோக்கியராஜ், சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  

 இதுகுறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜான்சி, அங்கு  சனிக்கிழமை இறந்தார். இறந்த ஜான்சி 6 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →