முகப்பு
திருநெல்வேலி

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆா்ப்பாட்டம்

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

திருநெல்வேலி: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்; பொதுமக்களை சித்திரவதைக்கு ஆளாக்கும் காவல் துறையினா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அலாவுதீன், சிந்தா, மீரான், இனப் படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பு நிா்வாகி அ.பீட்டா், மதிமுக அகஸ்டின், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிா்வாகி அப்துல் ஜப்பாா், நயினாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.