அக்.16இல் காணொலியில்விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி காட்சி மூலம் இம்மாதம் 16ஆம் தேதி நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி காட்சி மூலம் இம்மாதம் 16ஆம் தேதி நடைபெறுகிறது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இக்கூட்டம் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வட்டார அளவிலான வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காணொலி அரங்கில் பங்கேற்று ஆட்சியரிடம்தங்கள் குறைகளை தெரிவித்து தீா்வு பெறலாம். இதற்காக விவசாயிகள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்துள்ளாா்.