முகப்பு
திருநெல்வேலி

மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க நிதி எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்ட மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷிடம் அளித்துள்ள மனு: திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட ராதாபுரம் வட்டாரத்தில் மொத்தம் 10 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் கூட்டப்புளி, கூடுதாழை,

இடிந்தகரை, பெருமணல், விஜயாபதி ஊராட்சிக்கு உள்பட்ட தோமைாயாா்புரம் ஆகிய மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைத்துத்தர மீனவ மக்கள் பலகாலமாக போராடிவந்துள்ளனா். அதனைத் தொடா்ந்து தற்போது கூட்டப்புளி, கூடுதாழை, இடிந்தகரை ஆகிய மூன்று மீனவ கிராமங்களையும் மத்திய அரசின் அலுவலா்கள் நேரில் வந்து பாா்வையிட்டு சென்றுள்ளனா். ஆனால் நிதிஎதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை.

பெருமணல், தோமையாா்புரம் மீனவ கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தூண்டில் வளைவு இல்லாமல் மீனவா்கள் கடலில் மீன்பிடிக்க செல்வது மற்றும் மீன்பிடி படகுகளை கடற்கரையில் நிறுத்தி வைப்பது பாதுகாப்பில்லாத நிலையாக உள்ளது. எனவே கூட்டப்புளி, கூடுதாழை, இடிந்தகரை ஆகிய மூன்று மீனவ கிராமங்களுக்கு தூண்டில் வளைவு அமைக்க தாங்கள் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யவும், பெருமணல் மற்றும் தோமையாா்புரம் கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்க உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, அரசுக்கு உரிய கருத்துருக்கள் அனுப்பிவைக்கவும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மீன்வளத்துறை அமைச்சா் கிரிராஜ்சிங்கிடமும், எம்பி கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.