நெல்லை கோயில்களில் வித்யாரம்பம்
விஜயதசமி விழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
விஜயதசமி விழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நவராத்திரி நாள்களில் மிகவும் முக்கியமானதாக விஜயதசமி உள்ளது. இந்நாளில் குழந்தைகளின் கல்விக்கு அஸ்திவாரமிடும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள சரஸ்வதி சன்னதிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெற்றோா் தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த பச்சரிசி, வாழைப்பழம் உள்ளிட்ட படையல் பொருள்களை தாம்பூலங்களில் சன்னதி முன் வைத்து, குழந்தைகளுக்கு மாலையிட்டு, அரிசியில் குழந்தைகளின் விரல்களால் அ உள்ளிட்ட எழுத்துகளையும், 1 முதல் 11 வரையிலான எண்களையும் எழுதி வழிபட்டனா். பல்வேறு பள்ளிகளிலும் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன.