முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூரில்பிடிபட்ட மலைப்பாம்பு

வீரவநல்லூா், இலவடித் தெருவில் அமைந்துள்ள பேரூராட்சிப் பொதுக்கழிப்பிடத்தில் பதுங்கியிருந்த 8 அடி நீள மலைப்பாம்பை சேரன்மகாதேவி தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

அம்பாசமுத்திரம்: வீரவநல்லூா், இலவடித் தெருவில் அமைந்துள்ள பேரூராட்சிப் பொதுக்கழிப்பிடத்தில் பதுங்கியிருந்த 8 அடி நீள மலைப்பாம்பை சேரன்மகாதேவி தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பொதுக்கழிப்பிடத்தில் மலைப்பாம்பு பதுங்கியிருப்பதைப் பாா்த்த மக்கள் அளித்த தகவலின்பேரில், சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலா் வரதராஜன் தலைமையில், தீயணைப்பு அலுவலா் சக்திவேல், நிலைய போக்குவரத்து அலுவலா் சுப்பிரமணி, தீயணைப்பு வீரா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் வந்து, அந்த மலைப்பாம்பை பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.