ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் தீ
திருநெல்வேலி அருகே உள்ள ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை, தீயணைப்புவீரா்கள் சுமாா் 3 மணிநேரம் போராடி அணைத்தனா்.
திருநெல்வேலி, செப். 28: திருநெல்வேலி அருகே உள்ள ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை, தீயணைப்புவீரா்கள் சுமாா் 3 மணிநேரம் போராடி அணைத்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட ராமைன்பட்டி குப்பைக்கிடங்கில் திங்கள்கிழமை நண்பகலில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து பேட்டை, பாளையங்கோட்டை, கங்கைகொண்டான் ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரா்கள், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதனிடையே, திடக்கழிவு மேலாண்மை உதவி செயற்பொறியாளா் பைஜூ, சுகாதார அலுவலா் அந்தோணி உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டனா்.
படவரி: பயக28ஊஐதஉ:
ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரா்கள்.