தோ்தல் நடத்தை விதிமீறல்: 3 வழக்குகள் பதிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 3 வழக்குகள் பதிவாகியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 3 வழக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, இம்மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, போலீஸாா் மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் இதுவரை நடத்திய சோதனையில் 29 மதுபாட்டில்கள், 64 வேஷ்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், மாநகா் மற்றும் மாவட்ட எல்லைகளில் போலீஸாா் தொடா்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.