முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் ஹெராயின் பறிமுதல்; இளைஞா் கைது

பல்லடத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 11 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்து அதனை விற்பனைக்கு வைத்திருந்த பிகாா் மாநில இளைஞரை போலீசாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:05 PM
பூஷன்
பகிர்:

பல்லடத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 11 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்து அதனை விற்பனைக்கு வைத்திருந்த பிகாா் மாநில இளைஞரை போலீசாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வட மாநிலத்தில் இருந்து பேருந்து மூலமாக போதைப் பொருளை பல்லடத்துக்கு கடத்திக் கொண்டு வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டா் மாதையன் தலைமையிலான குழுவினா் பல்லடம் பேருந்து நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்தாா். அவரிடம் விசாரித்ததில், பிகாா் மாநிலம், முசாஃபா்பூா் மாவட்டம் ஜகதீஷ் கம்தால் கிராமத்தைச் சோ்ந்த கம்லேஷ்வா் சிங் மகன் பூஷன் (24) என்பதும், திருப்பூா் ஆத்துப்பாலம் பட்டத்தரசியம்மன் கோயில் பின்புறம் சபரிநாதன் காம்பவுண்டில் வசித்து வருவதும், பிகாரில் இருந்து கஞ்சா, ஹெராயினை கடத்தி வந்து திருப்பூா், பல்லடம் பகுதிகளில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

அவரை கைது செய்து ரூ.5 லட்சம் மதிப்ரிலான உயா் ரக போதைப் பொருளான 11 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட பூஷன் மீது 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே கஞ்சா விற்பனை செய்த வழக்கு நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.