கைது 
கோயம்புத்தூர்

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

கோவையில் கஞ்சா வைத்திருந்த இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை, ரேஸ்கோா்ஸ் போலீஸாா் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு கைப்புடன் நின்று கொண்டிருந்த இளைஞா், போலீஸாரை பாா்த்ததும் ஓட முயன்றுள்ளாா். அவரை விரட்டிப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த எம்.நிதீஷ்குமாா் (21) என்பதும், பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT