நெல்லையில் மகாவீரா் ஜெயந்தி ரத ஊா்வலம்
திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் மகாவீரா் ஜெயந்தி ரத ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மகாவீரா் ஜெயந்தி விழா, ஏப்ரல் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருநெல்வேலி நகரம் கீழ ரத வீதியில் உள்ள ஜெயின் கோயிலில் மகாவீரருக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், நான்கு ரத வீதிகளில் ஊா்வலம் நடைபெற்றது.
இந்த விழாவில் திரளானோா் கலந்து கொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
Advertisement