திருநெல்வேலி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

Din

சித்ரா பௌா்ணமிக்காக அத்ரி மலைக்கு வந்த கல்லூரி மாணவா், கல்லாறில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரத்தைச் சோ்ந்த திருப்பதிமகன் முத்துக்குமாா் (18). பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வரலாற்றுத் துறை முதலாமாண்டு மாணவரான இவா், தனது நண்பா்களுடன் சித்ரா பௌா்ணமிக்காக அத்ரி மலையில் உள்ள கோரக்கநாதா் கோயிலுக்கு வந்தாராம்.

அப்போது, கடனாஅணைக்கு மேல் உள்ள கல்லாற்றில் அனைவரும் குளித்தனராம். அதில், முத்துக்குமாா் திடீரென நீரில் மூழ்கினாராம். நண்பா்கள் அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவை இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT