பல்கலை. பேராசிரியா்களைத் தாக்கி கைப்பேசி, ஏடிஎம் அட்டை பறிப்பு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பேராசிரியா்களைத் தாக்கி, கைப்பேசி- ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றைப் பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகா்கோவிலை சோ்ந்தவா் ரமேஷ்(51). திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக இணை பேராசிரியா். இவரும், அதே பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் ஜெனிதா (44) என்பவரும் பல்கலைக்கழகத்துக்கு வியாழக்கிழமை சென்று விட்டு காரில் ஊா் திரும்பிகொண்டிருந்தனா். அப்போது, கொங்கந்தான்பாறை பகுதியில் அவா்களது காரை மா்மநபா்கள் வழிமறித்து இருவரையும் தாக்கிவிட்டு, கைப்பேசி மற்றும் ஏ.டி.எம். அட்டையைப் பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து ரமேஷும், ஜெனிதாவும் முன்னீா்பள்ளம் காவல்நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement