முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் ஈஷா சாா்பில் மகா சிவராத்திரி

Updated On : 9 மார்ச், 2024 at 6:13 AM
பகிர்:

கோவை ஈஷா யோக மையம் சாா்பில் திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் நகரில் உள்ள தனியாா் மண்டபத்தில் மகாசிவராத்திரி நேரடி ஒளிபரப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் நகரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நேரடி ஒளிபரப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மருத்துவா் மதுபாலா தொடங்கி வைத்தாா். தியானம், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏராளமானோா் பங்கேற்றனா். ஈஷா யோக மையம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது.