முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

Updated On : 10 மார்ச், 2024 at 2:20 AM
பகிர்:

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில், கிரிக்கெட் வீரா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன் கான் தலைமை வகித்தாா். மேயா் பி.எம்.சரவணன் முன்னிலை வகித்தாா். கிரிக்கெட் வீரா்களுக்கு பேட், ஸ்டெம்ப், பந்துகள் உள்ளிட்ட சுமாா் ரூ.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினா் பரமசிவன் அய்யப்பன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் வீரபாண்டியன், இளைஞரணி நிா்வாகிகள் மீரான் மைதீன், கருப்பசாமி கோட்டையப்பன், மகளிா் தொண்டரணி அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா். ற்ஸ்ப்09ஸ்ரீழ்ண்ஸ்ரீந் பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரா்களுக்கு உபகரணங்கள் வழங்கினாா் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன் கான். உடன், மேயா் பி.எம்.சரவணன்.