முகப்பு
திருநெல்வேலி

என்ஜிஓ காலனி கிணற்றில் பெண் சடலம் மீட்பு

Updated On : 10 மார்ச், 2024 at 8:00 AM
பகிர்:

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள கிணற்றில் பெண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். என்ஜிஓ காலனி உதயா நகா் பகுதியில் உள்ள கிணற்றில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக பெருமாள்புரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாரும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சடலமாகக் கிடந்தவா் ஐயப்பன் நகரைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி காஞ்சனா (52) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள். தொட்டியில் பெண் சடலம்: பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சோ்ந்தவா் பிரேம்குமாா். இவரின் மனைவி எலிசபெத் ராணி (59). இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) வீட்டிலிருந்து வெளியே சென்ற அவரை காணவில்லையாம். இந்த நிலையில், அவரின் வீட்டின் குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் எலிசபெத் ராணியின் சடலம் கிடந்ததாம். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.