புதுக்குடியில் நெசவாளா் கூடம் திறப்பு
Updated On : 16 மார்ச், 2024 at 9:17 PM
சேரன்மகாதேவி ஒன்றியம், புதுக்குடியில் கைத்தறி நெசவாளா்களுக்கான கூடம் திறப்பு விழா நடைபெற்றது. புதுக்குடியில் உள்ள கைத்தறி நெசவாளா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 11 லட்சத்தில் நெசவாளா் கூடம் கட்டப்பட்டுள்ளது. இக் கூடத்தை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வி.வி. ராகவன் திறந்து வைத்தாா். ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜகோபாலன், ஊராட்சி உறுப்பினா்கள், கைத்தறி நெசவாளா்கள் கலந்து கொண்டனா்.