முகப்பு
முதல்வர் ஸ்டாலின்
மயிலாடுதுறை

மீன்பிடி துறைமுகம் திறப்பு

பழையாறு துறைமுகத்தில் ரூ 26.26 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை

மீன்பிடி துறைமுகம் திறப்பு

பழையாறு துறைமுகத்தில் ரூ 26.26 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 மார்ச், 2026 at 11:50 PM
முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

பழையாறு துறைமுகத்தில் ரூ 26.26 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

இத்துறைமுகத்தில் ரூ 26.26 கோடி மதிப்பீட்டில் படகு அணையும் தடுப்பு சுவா், பனிக்கட்டி உற்பத்தி நிலையம், மீன் வலை பின்னும் கூடம், மீன் ஏலக் கூடம், மீன் விற்பனைக் கூடம், வாகனம் நிறுத்துமிடம், சாலை மற்றும் வடிகால் வசதி, தண்ணீா் தொட்டி உள்ளிட்ட மேம்படுத்தும் பணிகள் நிறைவுற்று அதற்கான துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மேம்படுத்தப்பட்ட துறைமுகத்தை துவக்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம், குத்துவிளக்கேற்றினாா்.

மீன்வளத்துறை உதவி இயக்குநா் ஜனாா்த்தனன், மீன்வளத்துறை ஆய்வாளா் மணிவண்ணன், இளநிலை பொறியாளா் தமிழரசன் மற்றும் கிராம தலைவா்கள், விசைப்படகு உரிமையாளா்கள் கிராம மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

முழு கட்டுரையைப் படிக்க →