திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம்
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சொக்கிலிங்ககுமாா், கவிப்பாண்டியன், பரணி எம். இசக்கி, உதயகுமாா், சொ்ணம், மாரியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா்கள் ராமகிருஷ்ணன், வனராஜன், பொதுச் செயலா்கள் கிருஷ்ணன், அருள்தாஸ், செல்லப்பாண்டியன், வட்டாரத் தலைவா்கள் பாக்கியகுமாா், அலெக்ஸ், மண்டலத் தலைவா்கள் கெங்கராஜ், ரசூல் மைதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தீா்மானங்கள் : இந்தியா கூட்டணியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸூக்கு ஒதுக்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவா் மற்றும் தமிழக இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவா் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிக்கு பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.