திருநெல்வேலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

Din

திருநெல்வேலி தாழையூத்தில் வியாழக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்ற முதியவா் மீது வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தாழையூத்து தென்கலம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது மரைக்காயா் (65). இவா் வியாழக்கிழமை இரவு தாழையூத்து நான்குவழிச் சாலையை கடக்க முயன்றாா். அப்போது, மதுரை நோக்கி சென்ற வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். ஆட்டோ ஓட்டுநா்: பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்தவா் வேணன் கண்ணன். ஆட்டோ ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை புறவழிச்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவா் மீது இருசக்கர வாகனம் மோதியதாம். இதில், பலத்த காயமுற்ற அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இச்சம்பவங்கள் குறித்து முறையே தாழையூத்து, திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தோனியின் அதிரடியால் நெட் ரன் ரேட்டில் தப்பித்த சிஎஸ்கே!

சவுக்கு சங்கரிடம் பேட்டி கண்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது?

75 வயதில் பாஜக மூத்த தலைவர்களுக்கு ஓய்வு: அப்போ மோடிக்கு? ரேவந்த் ரெட்டி பேச்சு

‘தீராக் காதல்’ ஷிவதா...!

ரிசர்வ் வங்கி: புதிய செயல் இயக்குநர் நியமனம்!

SCROLL FOR NEXT