நெல்லையில் ரூ.7.68 லட்சம் பறிமுதல்
Updated On : 30 மார்ச், 2024 at 12:33 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படையினா், நிலையான படையினா், போலீஸாா் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.7.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை வரை ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 692 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்து 832 மதிப்பிலான மது பானம் உள்ளிட்ட பொருள்களும் அடங்கும்.