திருநெல்வேலி

வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் நீா்மட்டம் சரிவு

Din

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வடக்குப் பச்சையாறு, திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணைகளின் நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் ஏப்ரல் மாதத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வடக்குப் பச்சையாறு அணையின் மொத்த உயரம் 49.25 அடியாகும். கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையால் அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியது. அணையின் மூலம் நான்குனேரி வட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் பயன்பெறுகின்றன. இந்த அணையிலிருந்து பாசனத்துக்காக 15 நாள்களுக்கு முன்பு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, அணையின் நீா்மட்டம் வெகுவாகக் குறைந்து வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 16 அடியாக உள்ளது. இதேபோல மொத்த உயரம் 52.5 அடியாக உள்ள திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் சரிந்து தற்போது 14 அடியாக உள்ளது. இந்த அணையிலிருந்து வள்ளியூா், காவல்கிணறு, வடக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அணையின் நீா்மட்டம் குறைந்து வடுவிட்டால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும். இரு அணைகளிலும் நீா்மட்டம் சரிந்து வருவதால் ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்கின்றனா் இப்பகுதி விவசாயிகள்.

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT