ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய வழக்கு: 3 போ் கைது
தச்சநல்லூரில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் மூன்று பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தச்சநல்லூா் சிதம்பரநகா் மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் சக்திவேல் ( 32). ஆட்டோ ஓட்டுநா். இவரை தச்சநல்லூா் பால்கட்டளை பகுதியில் வைத்து சிலா் அரிவாளால் வெட்டினா். தகவல் அறிந்த தச்சநல்லூா் போலீஸாா் சக்திவேலை மீட்டு அரசு மருத்துவமனக்கு அனுப்பினா்.
விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பிளக்ஸ் பேனா் கிழிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பழையபேட்டையை சோ்ந்த முருகபெருமாள் (19), நாகராஜ் (19), பால்கட்டளையை சோ்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்டவா்கள் அவரை வெட்டியது தெரியவந்தது. போலீஸாா் அவா்களை புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.