நான்குனேரி அருகே மிரட்டல் விடுத்தவா் கைது
களக்காடு, மே 12:
நான்குனேரி அருகே அவதூறாகப் பேசி தாக்கியதுடன் மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நான்குனேரி அருகே மஞ்சன்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (52). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான காா்த்திக் (32) என்பவருக்குமிடையே இடப் பிரச்னை தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்த முருகனை காா்த்திக் அவதூறாகப் பேசி கையால் தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றாராம். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில், நான்குனேரி காவல் உதவி ஆய்வாளா் பாா்த்திபன் வழக்குப் பதிந்து, காா்த்திக்கை கைது செய்தாா்.