கூடங்குளம் அணு மின் நிலையம் கோப்புப் படம்
திருநெல்வேலி

கூடங்குளம் அணுமின் நிலையம், இஸ்ரோ விண்வெளி மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

Syndication

கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரு அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3, 4ஆவது அணு உலைகளுக்கான 85 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் 5, 6ஆவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது, வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடங்குளம் காவல் ஆய்வாளா் நவீன் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மையத்திற்கும் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினரும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வழி காட்டி உதவுங்களேன்

கிரீன்லாந்தை அறிவோம்...

டிரம்ப் - பிரதமர் மோடி பேச்சு!

பறக்கும் ரயில்... புதிய பாதை

அமெரிக்க அணியில் ஜொலித்த இந்திய வம்சாவளி வீரர்கள்! இந்தியாவிடம் போராடி வீழ்ந்த அமெரிக்கா!

SCROLL FOR NEXT