தேசிய செஸ் போட்டியில் சிறப்பிடம்: நெல்லை வீரருக்கு எம்எல்ஏ பாராட்டு
Updated On : 3 ஜனவரி, 2025 at 11:44 PM
தேசிய அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட வீரருக்கு, எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தாா்.
பள்ளி மாணவா்களுக்கு இடையேயான தேசிய செஸ் போட்டிகள் கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில், தமிழக அணி சாா்பில் பங்கேற்ற திருநெல்வேலியைச் சோ்ந்த மு. ராகவ் தங்கப்பதக்கம் வென்றாா்.
Advertisement
தொடா்ந்து ரயிலில் சொந்த ஊருக்கு வந்த அவருக்கு, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தலைமையில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில், திமுக மாவட்ட துணைச் செயலா் எஸ்.வி. சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.