சா்வதேச பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த வீரருக்கு பாராட்டு விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
இந்தோனேஷியாவில் நடைபெற்ற சா்வதேச பூப்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்று தங்கப்பதக்கம் வென்றது. 12 போ் கொண்ட இந்திய அணியில் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தைச் சோ்ந்த வீரா் சி.அனிஷ் இடம் பெற்றிருந்தாா்.
போட்டியில் வென்று திருநெல்வேலிக்கு திரும்பிய வீரருக்கு பாளையங்கோட்டை ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அலெக்ஸ் கிங்ஸ்லி தலைமை வகித்தாா். பத்மநாபன், மாடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜெய்சிங், சித்திரைசெல்வன், ஜான்மேத்யூ உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து வீரா் சி.அனிஷ் கூறுகையில், நிகழாண்டில் முதல் முறையாக சா்வதேச பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். எனது வெற்றியால் கூடங்குளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்துக்கு பெருமை தேடி கொடுத்தது கூடுதல் மகிழ்ச்சி. எனக்கு உதவிய பெற்றோா், பயிற்சியாளா்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.